Author: Editor web1
பிரம்மதேவர் இழந்திருந்த படைப்புத் திறனை மீண்டும் பெற்ற தலம், பிரகலாதனின் மனக்குழப்பம் நீங்கிய புனிதத் திருத்தலம், மகாபலி சக்கரவர்த்திக்கு சிரஞ்சீவித்துவம் அருளப்பெற்ற தெய்வீக ஸ்தலம் என பல அபூர்வ மகிமைகளை தன்னகத்தே தாங்கி நிற்கிறது திருகண்டேஸ்வரம் திருக்கோயில். “சீரார் வடுவூர் சிவற்கொரு நந்தா விளக்கு” என்று திருஞான சம்பந்தப் பெருமான் பாடிப் போற்றிய இந்தத் திருத்தலம், கடலூரிலிருந்து பண்ருட்டி சாலையில் சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சுமார் 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் சோழர், பாண்டியர் காலங்களில் பல திருப்பணிகளை பெற்றுள்ளது. பிரம்மனுக்குப் படைப்புத் திறன் அளித்த ஆனந்த பைரவர் இத்தலத்தின் ஈசான்ய மூலையில் அருள்பாலிக்கும் ஆனந்த பைரவர் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறார். பிரம்மதேவர் இழந்த படைப்புத் திறனை மீண்டும் பெற இவரே அருள்செய்ததாக தலபுராணம் கூறுகிறது. தேய்பிறை அஷ்டமி நாளில் திராட்சைச் சாறு, மாதுளம் சாறு, தேன் ஆகியவற்றை நைவேத்தியமாக சமர்ப்பித்து வழிபட்டால் கண் திருஷ்டி…
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அருகே உள்ள கீழையூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ரெங்கநாயகி சமேத ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் திருக்கோயிலின் சித்திரை பிரம்மோத்ஸவ விழா பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மே 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த பத்து நாள் பிரம்மோத்ஸவ விழாவில், தினமும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் திருக்கல்யாண உற்சவம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ ரெங்கநாத பெருமாளும், அதிரூப வள்ளி ரெங்கநாயகி தாயாரும் சிறப்பு மலர் அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க யாகங்கள் நடத்தப்பட்டன. முன்னதாக பக்தர்கள் 51 வரிசை தட்டுகள் எடுத்து வந்து பெருமாளுக்கு சமர்ப்பித்தனர். பின்னர் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து மாங்கல்ய தாரணம் பாரம்பரிய முறையில் நடைபெற்ற போது, மங்கள இசை முழங்க பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா…” என்று…
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் ஜெ.ஜெ. நகரில் அமைந்துள்ள அருள்மிகு மகா மாரியம்மன் கோவிலின் ஆண்டு தீமிதி திருவிழா பக்தி பரவசத்துடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து அம்மனை தரிசித்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர். விழா காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சுவாமி கரகம் பாலித்து, அம்மன் திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தெருதோறும் பக்தர்கள் மலர் தூவி, தீபம் ஏற்றி அம்மனை வரவேற்றனர். திருவிழாவின் இரண்டாம் நாள் காலை, பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்தும், அலகு குத்தியும், பல்வேறு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியும் அம்மனை வழிபட்டனர். பெண்கள் மாவிளக்கு ஏற்றி சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவின் உச்சநிகழ்வாக நடைபெற்ற தீமிதி திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் “அம்மன் அருள்” முழக்கத்துடன் அக்னிக்குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். குறிப்பாக, தங்களது குழந்தைகளைத் தலையில் சுமந்தபடி பலர் தீமிதித்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. குழந்தைகளின் நலன்,…
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வராஹ நதிக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயிலின் தலபுராணம் பக்தர்களை பரவசப்படுத்துகிறது.பெரியகுளம் அருகே வராஹ நதிக்கரையில் அமைந்துள்ள இந்தத் திருக்கோயில், பக்தர்களின் துயரங்களைத் தேடி வந்து தீர்க்கும் அருள்தலமாக போற்றப்படுகிறது. சோழப் பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழன் இந்தப் பகுதியைச் சுற்றிப்பார்த்தபோது, அகமலை வனப்பகுதியில் மனதை உருக்கும் ஒரு காட்சியை கண்டார். குட்டிகளுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த தாய்ப் பன்றி தவறி ஆழமான பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தது. பசியால் அலறும் குட்டிகளின் வேதனையைப் பொறுக்க முடியாமல் முருகப்பெருமான் தாய்ப்பன்றியின் வடிவில் வந்து அவற்றுக்கு பாலூட்டி காத்தார். இந்த தெய்வீகக் காட்சியைத் தரிசித்த ராஜேந்திர சோழன், முருகனுக்கும் சிவபெருமானுக்கும் இத்தலத்தில் ஆலயம் எழுப்பினார். அதனால் இங்குள்ள சிவன் “ஸ்ரீ ராஜேந்திர சோழீஸ்வரர்” என்றும், அம்பாள் “ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி” என்றும் அழைக்கப்படுகிறார். ஆனால் பக்தர்கள் இந்தத் தலத்தை பெரும்பாலும் பாலசுப்ரமணியர் கோயில் என்றே அழைக்கின்றனர். காசிக்கு நிகரான வராஹ…
ஆறுமுகனின் பன்னிரு கரங்களில் எத்தனையோ ஆயுதங்கள் திகழ்ந்தாலும், தனிச்சிறப்பு மிக்கது வேலாயுதம் மட்டுமே. தனியே துதித்து வழிபடப்படும் சிறப்பும் மேன்மையும் வேலாயுதத்துக்கு உண்டு. வீரவேல், வைரவேல், சக்திவேல், கூர்வேல், ஞானவேல் என்றெல்லாம் பற்பல திருப்பெயர்களுடன் சிறப்பிக்கப்படும் வேலாயுதத்தைப் பூஜித்து வழிபட்டால், தீவினைகள் யாவும் தீரும்; சத்ரு பயம் நீங்கும், சகல செளபாக்கியமும் கைகூடும் என்கின்றன ஞானநூல்கள். இவ்வளவு சிறப்பு கொண்ட வேலுக்கென்று தனிக்கோயில், முருகப்பெருமான் கோயில் கொண்டிருக்கும் மருதமலையின் அடிவாரத்தில் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இங்கே, கருவறையில் சுமார் ஆறேமுக்கால் அடி உயரத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் வேலாயுதம் சிற்பச் சிறப்புடன் திகழ்கிறது. வேலின் தண்டுப் பகுதியில் பஞ்ச பூதச் சக்கரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. வேலின் முகப்பு பகுதியில் இயற்கையான வெளிச்சம் விழும் விதம் சிறிய துவாரத்துடன் கருவறை விதானத்தை அமைத்துள்ளனர். கோயிலின் முன்மண்டபமானது முருகப் பெருமானின் ‘சரவண பவ’ எனும் ஆறெழுத்தைக் குறிக்கும் வகையில், அறுகோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. வேலக்கோட்டம் எனப்படும் இங்கு…
எப்போதும் புன்னகை முகத்துடன் காணப்படும் கடக லக்னத்தினர், பிறருக்கு உதவ வேண்டும் என்ற நல்ல மனப்பான்மை கொண்டவர்கள். முற்போக்கான சிந்தனை, உயர்ந்த இலக்குகள், சாதிக்க வேண்டும் என்ற உறுதி ஆகியவை இவர்களின் இயல்பான குணங்கள். வாழ்க்கையில் தனித்துவமான சாதனைகளை நிகழ்த்தும் திறன் இவர்களுக்கு உண்டு. ஜவஹர்லால் நேரு, காமராஜர் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நபர்கள் இந்த லக்னத்தில் பிறந்ததாக கூறப்படுகிறது. முக்கிய குணாதிசயங்கள் லக்னாதிபதி சந்திரன் என்பதால், பேச்சுத் திறன் அபாரமாக இருக்கும். வார்த்தை வளத்தால் எவரையும் கவர்ந்து வெற்றி பெறுவீர்கள். நீண்ட ஆயுள் மற்றும் நல்ல உடல் நிலை கிடைக்கும். வாழ்க்கையின் ஆரம்ப காலம் சாதாரணமாக இருந்தாலும், 40 வயதிற்கு பிறகு அதிர்ஷ்டம் பெரிதும் கைகொடுக்கும். மகாஜன யோகம், ராஜயோகம் மற்றும் செல்வ வளம் பெருகும் வாய்ப்பு உண்டு. அன்புக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள்; அதிகார மனப்பான்மையை விரும்பமாட்டீர்கள். நண்பர்கள் அதிகம் இருப்பார்கள். கற்பனைத் திறன், கல்வித் திறன், தொழில் முன்னேற்றம்…
மதுரையம்பதி எனப் போற்றப்படும் மதுரை நகரில், தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ளது தென் திருவாலவாய ஸ்வாமி கோயில். ஆயுளை நீட்டித்து, ஆரோக்கியத்துடன் வாழ்வளிக்கும் சக்தி வாய்ந்த திருத்தலமாக பக்தர்கள் இந்தக் கோயிலைப் போற்றுகின்றனர்.ஸ்தல புராணம்மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க எமதர்மன் பாசக்கயிற்றை வீசியபோது, அது சிவலிங்கத்தின் மீது பட்டது. இதனால் கடும் கோபம் கொண்ட சிவபெருமான், எமதர்மனை சாந்தப்படுத்தும் விதமாக இந்தத் தலத்துக்கு வந்து கடும் தவம் புரிந்தார் என்பது ஸ்தல புராணம். எனவே இங்கு எமதர்மனால் வணங்கி வழிபடப்பட்ட சிவபெருமானை தரிசிப்பதன் மூலம் ஆயுள், ஆரோக்கியம் ஆகியவை பெருகும் என்பது நம்பிக்கை. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்தில், ஸ்வாமி: ஸ்ரீ திருவாலவாயர் அம்பாள்: ஸ்ரீ மீனாட்சி அம்மன் என்று அருள்பாலிக்கின்றனர். இங்கு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகப்பெருமான், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ துர்கை ஆகியோருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.சிறப்பு வழிபாடுகள்திங்கட்கிழமை விரதம்…
புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அருள்தரும் சத்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் ஆலயத்தில் இன்று ( மே 11 ) திங்கட்கிழமை அப்பா பைத்தியம் சுவாமிகளின் 167வது பிறந்தநாள் குரு பூசை விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனித நீர் ஐங்கரன் வழிபாடும் நடைபெற்றது. தொடர்ந்து அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு தெந்தமிழில் வேள்வி, 8.30 மணிக்கு நிறைவேள்வி, 9 மணிக்கு அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், 10.30 மணிக்கு மலர் அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு பேரொளி வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்ற கட்சித் தலைவர் ரங்கசாமி மற்றும் என் ஆர் காங்கிரஸ் லாஸ்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி சிவக்கொழுந்து, இந்திரா நகர் தொகுதி எம்எல்ஏ ஏ கே டி…
பிரசித்திபெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை மற்றும் பெண்கள் மாநாடு நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான சித்திரை மாத கடைசி ஞயிற்றுக்கிழமையை ஒட்டி, வழக்கம் போல திருவிளக்கு பூஜை மற்றும் ஆன்மீக சொற்பொழிவு நேற்று இரவு நடைபெற்றது. மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமஙளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் கூடினர். அங்கிருந்து ஊர்வலமாக சென்ற பெண்கள், முக்கிய வீதிகள் வழியாக சென்று பகவதி அம்மன் கோயிலை வந்தடைந்தனர். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் ஆன்மீக சொற்பொழிவினில் பங்கேற்றனர். பின்னர் 6.30 மணியளவில் பகவதி அம்மன் கோயில் வளாகத்தில் 1008 திருவிளக்கு பூஜை…
திருச்சியில் உள்ள உலக பிரசித்திபெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா உற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ரங்கநாதர் கோயிலில், சித்திரை தேர் திருவிழாவை ஒட்டி, ஒவ்வொரு நாளும், காலை, மாலை என இருவேளையில், பல்வேறு வாகங்களில் எழுந்தருளும் நம்பெருமாள், எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்து வருகிறார். அந்த வகையில் 4-ம் நாளான நேற்று காலை இரட்டை பிரபை வாகன சேவை நடைபெற்றது. மாலையில் கருட வாகன சேவை நடைபெற்றது. வீதியில் உலாவந்த பெருமாளை பக்தர்கள் வழிநெடுங்கிலும் நின்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து 5-ம் நாளான இன்று காலையில் சேஷ வாகன சேவை நடைபெற்றது. ஸ்ரீநம்பெருமாள் இன்று அதிகாலை கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு மண்டபத்தை வந்தடைந்தார். வாகன மண்டபத்தில் இருந்து சேஷ வாகனத்தில் எழுந்திருளிய நம்பெருமாள், சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பின்…
