Author: Editor web1
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வேப்பில்லை மாரியம்மன் கோயில். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா நடைபெறும். அதன் படி இந்தாண்டின் சித்திரை திருவிழா கடந்த 3-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதியுலா வரும் வேடபாரி நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வேப்பிலை மாரியம்மன் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் குதிரை வாகனத்தில் எழுந்தருளியதும், கோயிலில் இருந்து தாரை, தப்பட்டை முழங்க பக்தர்களின் முழக்கத்துடன் வேடபரி புறப்பட்டது. ராஜவீதிகள் வழியாக வலம் வந்த அம்மனை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோயில் வெள்ளத்தில் அம்மன் மிதந்து மீண்டும் கோயிலை வந்தடைந்தது.
சிவபெருமானுக்கும், பெருமாளுக்கும் குடைவரைக் கோயில்கள் இருப்பது வழக்கம். ஆனால், விநாயகப் பெருமானுக்காக அமைக்கப்பட்ட மிகத் தொன்மையான, புகழ்பெற்ற குடைவரைக் கோயில் பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயம் ஆகும். சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆன்மிகத் தலம், குன்றக்குடி மற்றும் காரைக்குடிக்கு அருகில் அமைந்துள்ளது. பிள்ளையார்பட்டி குடைவரைக் கோயில் சுமார் 1600 ஆண்டுகள் பழமையானது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்கோயில் மகேந்திர வர்ம பல்லவன் காலத்திற்கும் முந்தைய முற்காலப் பாண்டியர்களால் பாறையைக் குடைந்து செதுக்கப்பட்டதாகும். கல்வெட்டுச் சான்றுகள்: இங்குள்ள குகைக் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் கி.பி. 4 அல்லது 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமி எழுத்து வடிவில் அமைந்துள்ளன. இக்கோயிலை உருவாக்கிய சிற்பியின் பெயர் ‘எருக்காட்டூர் பெருந்தச்சன்’ என்று அந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய பெயர்கள்: கல்வெட்டுகளில் இவ்வூர் ‘மருதங்குடி’, ‘எருக்காட்டூர்’ என்றும், விநாயகர் ‘தேசிவிநாயகப் பிள்ளையார்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளார். பிற்காலத்தில் பிள்ளையார் வீற்றிருக்கும் ஊர் என்பதால் இது ‘பிள்ளையார்பட்டி’…
2026ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி நிகழும் குருப்பெயர்ச்சியில், குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு (தனது உச்ச வீடான கடகத்திற்கு) பெயர்ச்சி ஆகிறார். ரிஷப ராசிக்கு இந்த இடமாற்றத்தின் மூலம் குரு பகவான் 3ம் இடமான முயற்சி, வீரியம் மற்றும் இளைய சகோதர ஸ்தானத்திற்கு வருகிறார். மறைமுக ஸ்தானத்தில் குரு அமர்ந்தாலும், அவர் தனது உச்ச பலத்துடனும் சுப பார்வைகளாலும் ரிஷப ராசியினருக்கு என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறார் என்பதை விரிவாகக் பார்க்கலாம். பொதுவான பலன்கள்: 3ம் இடம் என்பது மறைவு ஸ்தானம் என்பதால், தொடக்கத்தில் சில சவால்களும் அதிக உழைப்பும் தேவைப்பட்டாலும், குருவின் பார்வை பலத்தால் இறுதியில் உழைப்புக்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். 3ஆம் இடத்தில் அமரும் குரு பகவான் தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் உங்கள் ராசிக்கு 7ம் இடம் (களத்திர/கூட்டுத்தொழில் ஸ்தானம்), 9ம் இடம் (பாக்ய ஸ்தானம்) மற்றும் 11ம்…
2026ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி நிகழும் குருப்பெயர்ச்சியில், குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு (தனது உச்ச வீடான கடகத்திற்கு) பெயர்ச்சி ஆகிறார். மேஷ ராசிக்கு 9 (பாக்ய ஸ்தானம்) மற்றும் 12 (அயன சயன போக ஸ்தானம்) ஆகிய வீடுகளுக்கு அதிபதியான சுபக் கிரகமான குரு பகவான், இந்த பெயர்ச்சியின் மூலம் உங்கள் ராசிக்கு 4-ம் வீடான சுக ஸ்தானத்திற்கு (உச்சம் பெற்று) வருகிறார். குரு பகவான் தான் அமரும் இடத்தை விட பார்க்கும் இடங்களின் வழியே பலன்களைத் தருவார். அதிலும் அவர் உச்சம் பெற்று, உங்கள் ராசிக்கு 8, 10 மற்றும் 12 ஆகிய இடங்களைப் பார்ப்பதால், மேஷ ராசியினருக்கு இந்த பெயர்ச்சி பல அதிரடி மாற்றங்களையும், சுப பலன்களையும் அள்ளித் தரப்போகிறது. பொதுப் பலன்கள்: குருவின் 7-ம் பார்வை உங்கள் ராசிக்கு 10-ம் வீடான தொழில் ஸ்தானத்தின் மீது விழுவதால், தொழிலில் இருந்த…
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக வார இறுதிநாட்கள், விடுமுறை நாட்களில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் கடந்த 16-ம் தேதி பிற்பகலில் இருந்து தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது. இதனால் சனிக்கிழமை 90,011 பேர் தரிசனம் செய்திருந்தனர். ரூ.3.76 உண்டியல் காணிக்கை வசூலானது. அதேப் போல நேற்று 91,020 பேர் தரிசனம் செய்திருந்தனர். அவர்கள் மூலம் ரூ.3.54கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. ரூ.300 ஆன்லைன் தரிசனத்தில் வந்த பக்தர்கள் 5 மணி நேரமும், தரிசன டிக்கெட் இல்லாமல் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 18 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக வார இறுதிநாட்கள், விடுமுறை நாட்களில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் கடந்த 16-ம் தேதி பிற்பகலில் இருந்து தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது. இதனால் சனிக்கிழமை 90,011 பேர் தரிசனம் செய்திருந்தனர். ரூ.3.76 உண்டியல் காணிக்கை வசூலானது. அதேப் போல நேற்று 91,020 பேர் தரிசனம் செய்திருந்தனர். அவர்கள் மூலம் ரூ.3.54கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. ரூ.300 ஆன்லைன் தரிசனத்தில் வந்த பக்தர்கள் 5 மணி நேரமும், தரிசன டிக்கெட் இல்லாமல் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 18 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இந்து தர்மத்திலும், வானியல் ரீதியாகவும் ‘மூன்றாம் பிறை’ தரிசனம் என்பது மிகவும் மங்களகரமான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. அமாவாசை முடிந்து வரும் மூன்றாம் நாளில் தோன்றும் சந்திரனைத் தரிசிப்பது ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி, மன ரீதியாகவும் பெரும் நன்மைகளைத் தரக்கூடியது. சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். மூன்றாம் பிறையைத் தரிசிக்க வேண்டிய அவசியம் என்ன, அதன் ஆன்மிகப் பின்னணி மற்றும் அந்த தரிசனத்தால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதைப் பற்றிய விரிவாக பார்க்கலாம்… மூன்றாம் பிறை தரிசிக்க வேண்டிய அவசியம் என்ன? சந்திரன் தனது பொழிவை மறைத்து, அமாவாசையன்று ஒளியற்ற நிலையை அடைகிறது. அதன் பின், முதலாம் மற்றும் இரண்டாம் நாட்களில் சந்திரன் மிக மெல்லிய கோடாகத் தெரிந்தாலும், நம் கண்களுக்குத் தெளிவாகத் தெரிவதில்லை. மூன்றாம் நாளன்றுதான் சந்திரன் அழகிய வளைவாக,…
ஜோதிடத்தில் 5ம் பாவகம் அல்லது 5ம் வீடு என்பது ஒருவருடைய வாழ்க்கையின் மிக முக்கியமான பாவங்களில் ஒன்றாகும். இது கால தேவனின் தத்துவப்படி சிம்ம ராசியைக் குறிக்கிறது. 5ம் பாவகத்தின் ஆதிபத்தியங்கள் (காரகத்துவங்கள்) மற்றும் அதன் சாதக, பாதக பலன்களைப் பற்றி பார்க்கலாம். 5ம் பாவகத்தின் முக்கிய ஆதிபத்தியங்கள் (காரகத்துவங்கள்): 5ம் பாவகத்தை “பூர்வ புண்ணிய ஸ்தானம்” மற்றும் “புத்திர ஸ்தானம்” என்று அழைப்பார்கள். இதன் முக்கிய காரகத்துவங்கள்: குழந்தை பாக்கியம்: ஒருவருக்குக் குழந்தை பிறக்குமா, பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டா என்பதைத் தீர்மானிப்பது இந்த பாவகம் தான். பூர்வ புண்ணியம்: கடந்த பிறவிகளில் நாம் செய்த நல்வினைகளின் (புண்ணியங்களின்) பயனை இந்தப் பிறவியில் நாம் அனுபவிப்பதைக் குறிக்கும். அறிவு மற்றும் புத்திசாலித்தனம்: ஒருவரின் உள்ளார்ந்த ஞானம், கற்பனைத் திறன், ஆக்கப்பூர்வமான சிந்தனை (Creativity) மற்றும் சமயோசித புத்தி ஆகியவற்றையும் இந்த பாவகம் குறிக்கும். காதல் மற்றும் கலைகள்: காதல் நயம், கலை,…
விழுப்புரம் மாவட்டத்தின் உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் குறைகளைத் தீர்க்கும் அருள்மிகு மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவம் பக்திப் பெருக்கோடு வெகு விமரிசையாக நிறைவடைந்தது. வைகாசி அமாவாசை தினத்தையொட்டி அதிகாலை முதலே மேல்மலையனூர் கோவில் வளாகம் ஆன்மீக அதிர்வுகளால் நிறைந்திருந்தது. நடை திறக்கப்பட்டவுடன் மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தைத் தொடர்ந்து வண்ண வண்ண மலர்களாலும், ஜொலிக்கும் தங்கக் கவசத்தாலும் அம்மன் பேரெழிலோடு காட்சியளித்தார். சர்க்கரைப் பொங்கல், சுண்டல் மற்றும் பலவகை பழங்கள் படைக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதிகாலை முதலே நீண்ட நெடிய வரிசையில் பொறுமையோடு காத்திருந்த பக்தர்கள் அம்மனின் திவ்ய தரிசனத்தைக் கண்டு உருகினர். உற்சவர் அங்காளம்மன் ஆதிபராசக்தி அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள் பாலித்தார். நாள் முழுவதும் விரதமிருந்து இரவில்…
வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திர தினமான வைகாசி விசாகத் திருவிழா, வரும் 30ம் தேதி அனைத்து முருகன் ஆலயங்களிலும் மிக விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு வரும் 21ம் தேதி முதல் துவங்கும் புகழ்பெற்ற வசந்தத் திருவிழா 10 நாட்கள் தொடர்ந்து விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. திருவிழா நாட்களில் தினமும் பகல் பொழுதில் சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி கோயில் சண்முக விலாச மண்டபத்திற்கு செல்வார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்று, மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் நகர் முழுவதும் களைகட்டத் தொடங்கி உள்ளது. தினமும் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து…
