Author: Editor web1
சென்னை அருகே அமைந்துள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிl முருக பக்தர்களின் மிக முக்கியமான ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. குறிப்பாக சொந்த வீடு, நிலம், திருமணம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான வேண்டுதல்கள் நிறைவேறும் தலமாக இந்தக் கோயில் பரவலாக அறியப்படுகிறது. பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு நன்மை பெற்றதாக நம்பப்படும் இந்தத் தலம், தற்போது மேலும் அதிக பக்தர்களை ஈர்த்து வருகிறது. சென்னையிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில், சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. தல வரலாற்றின்படி, லவா மற்றும் குஷா ஆகியோர் இப்பகுதியில் தங்கியிருந்ததாகவும், அவர்களுக்கும் Ramaருக்கும் இடையே அறியாமலேயே போர் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. சிறுவர்கள் போரிட்ட பகுதி என்பதால் இத்தலம் ‘சிறுவாபுரி’ என அழைக்கப்பட்டதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பத்மாசூரனை வதம் செய்த பின் முருகப்பெருமான் இங்கு அருள் புரிந்ததாகவும் நம்பப்படுகிறது.…
உலகப் புகழ்பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் புரட்டாசி மாதம் நவராத்திரி மற்றும் வைகாசி மாத விசாக திருவிழா ஆகியவை விமர்சையாக நடைபெறும். இந்த விழா காலங்கைல் 10 நாட்களும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு நடைபெறும் அபிஷேகத்துக்குரிய புனித நீர், கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளிக் குடத்தில் எடுத்து வரப்படும். நெற்றிப் பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மேல் வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்படுவது வழக்கம். இந்த நிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 30-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த 10 நாட்கள் திருவிழாவிலும் காலை 10 மணிக்கு நடைபெறும் அம்மனுக்கு அபிஷேகத்திற்குரிய புனித நீர் விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளிக்…
சென்னையில் பிரசித்தி பெற்ற வடபழநி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்ச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மாலையில் யாகசாலை பூஜைகள் மற்றும் முகப்பெருமானுக்கு விஷேச பூஜையும் நடைபெறுகிறது. வரும் 31-ம் தேதி வரை தினசரி காலை மற்றும் மாலையில் வாகன வீதியுலா நடைபெறும். சூரிய பிரபை, சந்திர பிரபை, மங்களகிரி விமானம், ஆட்டுகிடா, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பலிக்கவுள்ளார். விழாவின் முக்கிய நிகழ்வாக 27-ம் தேதி காலை தேரோட்டமும், 30-ம் தேதி காலை தீர்த்தவாரி கலசாபிஷேகமும் மாலையில் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. அன்று இரவு மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நிகழ்வும், அதனை தொடர்ந்து கொடியிறக்கமும் நடக்கிறது. 31-ம் தேதி இரவு 7 மணிக்கு விசேஷ புஷ்ப பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
2026-ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி நிகழும் குருப்பெயர்ச்சியில், குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு (தனது உச்ச வீடான கடகத்திற்கு) பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடம்பெயர்வது, சிம்ம ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்தில் நிகழ்கிறது. இது ஒரு மாறுபட்ட காலகட்டம்; ஆன்மிக வளர்ச்சி, தொலைதூரப் பயணங்கள் மற்றும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய காலமாகும். பொதுப் பலன்கள்: பணப்புழக்கம் இருந்தாலும், செலவுகள் உங்கள் கட்டுப்பாட்டை மீறிச் செல்ல வாய்ப்புள்ளது. ஆனால், அந்தச் செலவுகள் வீண் விரயமாக அமையாமல், சுப விரயமாக (வீடு கட்டுதல், வாகனம் வாங்குதல், சுப காரியங்கள், ஆன்மீகப் பயணம்) மாற்றிக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனத்தில் உள்ளது. திடீர் முதலீடுகள் அல்லது பங்குச்சந்தை போன்ற அபாயகரமான துறைகளில் ஈடுபடும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை. பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். இது ஆன்மிக ரீதியாக உங்களுக்கு…
2026-ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி நிகழும் குருப்பெயர்ச்சியில், குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு (தனது உச்ச வீடான கடகத்திற்கு) பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு இடம்பெயர்வது, கடக ராசியினருக்குப் பல முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வரும். குரு பகவான் உங்கள் ராசிக்கு ஜென்ம குருவாக (1-ம் இடம்) வருகிறார். இது ஒரு முக்கியமான காலக்கட்டம், ஏனெனில் குரு தனது சொந்த வீட்டிற்கு (உச்ச வீட்டிற்கு) சமமான வலிமையைப் பெற்று உங்கள் ராசியில் அமர்வது ஆன்மிக முன்னேற்றத்தையும், ஆளுமை வளர்ச்சியையும் தரும். பொதுப் பலன்கள்: உங்கள் ஆளுமையில் ஒரு தெளிவு பிறக்கும். இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, சரியான முடிவுகளை எடுக்கத் தொடங்குவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை உயரும். சமூகம் மற்றும் குடும்பத்தில் உங்களின் அந்தஸ்து மற்றும் மரியாதை அதிகரிக்கும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 5, 7, 9 ஆகிய…
2026ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி நிகழும் குருப்பெயர்ச்சியில், குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு (தனது உச்ச வீடான கடகத்திற்கு) பெயர்ச்சி ஆகிறார். மிதுன ராசிக்கு குரு பகவான் கடக ராசிக்கு இடம்பெயரும் போது, ராசிக்கு 2-ம் இடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு வருவதால், இது ஒரு மிகச் சிறப்பான குருப்பெயர்ச்சியாகக் கருதப்படுகிறது. 2026-ம் ஆண்டு நிகழ இருக்கும் இந்தக் குருப்பெயர்ச்சி மிதுன ராசியினருக்குப் பொருளாதார ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் பெரும் மாற்றங்களைத் தர உள்ளது. பொது பலன்கள்: குரு பகவான் 2-ம் வீட்டில் அமர்வது பண வரவை அள்ளித் தரும். நீண்ட நாட்களாகத் தடைபட்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய சொத்துக்கள், தங்கம், ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்படும். பணத்தை ஆக்கப்பூர்வமான முறையில் முதலீடு செய்ய இது சிறந்த காலம். உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.…
ஒரு மனிதன் தனது வாழ்வில் அனுபவிக்கப் போகும் அதிர்ஷ்டம், தர்மம், தந்தையின் அனுகூலம், தந்தை வழி உறவு மற்றும் ஆன்மிக ஈடுபாடு ஆகியவற்றைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான இடம் 9-ம் பாவகம் ஆகும். 9-ம் பாவகத்தின் முதன்மை காரகங்கள்: ஜோதிடத்தில் 9-ம் பாவகம் என்பது ‘பாக்கிய ஸ்தானம்’ என்று அழைக்கப்படுகிறது. தந்தையின் நலம், அவருடனான உறவு, தந்தை வழி சொத்துக்கள் மற்றும் நமக்கு நல்வழி காட்டும் குருமார்கள். முன்ஜென்ம புண்ணியம் (பூர்வ புண்ணியம் 5-ம் இடம் என்றாலும், அதன் பலனை இந்த ஜென்மத்தில் அனுபவிப்பது 9-ம் இடம்). திடீர் அதிர்ஷ்டம். இறை வழிபாடு, ஒழுக்கம், தான தர்மங்கள் செய்தல், ஆன்மிகப் பயணம் மற்றும் புண்ணிய நதிகளில் நீராடுதல். கல்லூரி/பல்கலைக்கழக உயர் கல்வி, ஆராய்ச்சிப் படிப்பு மற்றும் நீண்ட தூர அல்லது வெளிநாட்டுப் பயணங்கள். 9-ம் பாவகத்தின் சாதக பலன்கள்: 9-ம் அதிபதி பலம் பெற்று, சுப கிரகங்களின் (குரு, சுக்கிரன், வளர்பிறை…
சதுரகிரி மலை வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, அது பல மர்மங்களும், அதிசய மூலிகைகளும், ஆன்மிக ரகசியங்களும் நிறைந்த ஒரு அமானுஷ்யமான தலம். மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், ஆன்மிகப் பெருமையோடும் இயற்கை எழிலோடும் திகழும் சதுரகிரி மலை மற்றும் அங்குள்ள சுந்தர- சந்தன மகாலிங்கம் கோயில்களின் தல வரலாறு பற்றி பார்க்கலாம். சதுரகிரி மலை- பெயர் மற்றும் வரலாற்றுப் பின்னணி: நான்கு திசைகளிலும் திசைக்கு நான்கு மலைகள் வீதம், மொத்தம் 16 மலைகள் சமமாக ஒரு சதுர வடிவில் சூழ்ந்துள்ளதால் இப்பகுதிக்கு ‘சதுரகிரி’ (சதுர வடிவ மலை) என்று பெயர் ஏற்பட்டது. ‘சதுர்’ என்றால் நான்கு வேதங்கள் என்றும் பொருள்படும். நான்கு வேதங்களும் ஒன்று கூடி மலையாக வீற்றிருப்பதால் இது சதுரகிரி என அழைக்கப்படுவதாக சிவபுராணம் குறிப்பிடுகிறது. சுமார் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த அடர்ந்த வனப்பகுதி, பதினெண் சித்தர்களின் தலைமைப் பீடமாகக் கருதப்படுகிறது. சிவபெருமானை நோக்கிச் சித்தர்கள் இன்றும்…
ஈரோடு மாவட்டம் கோபி வண்டிபேட்டையில் அமைந்துள்ளது 75 ஆண்டுகள் பழமையான ஸ்ரீஏரி மாரியம்மன் கோயில். இங்கு விநாயகர், துர்க்கை, கருப்பராயன், கன்னிமார் ஆகிய தெய்வங்களுக்கு தனித் தனி பிரகாரம் உள்ளது. இந்தக் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. கடந்த 8-ம் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் குடமுழுகு விழா தொடங்கியது. தொடர்ந்து 13-ம் தேதி முளைப்பாலிகை இடுதல், 15-ம் தேதி விநாயகர் பூஜை, நவகிரஹ யாகம் மற்றும் கணபதி யாகமும் பின்னர் பவானி கூடுதுறை ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. அதன்பின் 17-ம் தேதி முளைப்பாலிக கோயிலுக்கு கொண்டு வருதல், வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், முதல்கால யாக பூஜை, 18-ம் தேதி பூத சுத்தி, பாவனாபிஷேகம், மூர்த்தி கும்ப பூஜை, இரண்டாம் கால யாக பூஜையும், மாலையில் மூல மந்திர ஹோமமும், மூன்றாம்…
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனையொட்டி நேற்று காலை ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் கோயிலை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. அதிகாலை சுப்ரபாதம், தோமாலை சேவை, கொலு மற்றும் பஞ்சாங்க சிராணம் உள்ளிட்ட ஐபவங்கள் நடைபெற்றது. தொடர்ந்து 7 மணியில் தொடங்கிய தூய்மைப்பணி, காலை 9 மணி வரை நடைபெற்றது. அப்போது கோயில் வளாகம் மற்றும் பூஜைப் பொருட்கள் ஆகிய அனைத்தும் புனித நீரால் தூய்மைப்படுத்தப்பட்டது. தூய்மைப் பணி முடிந்ததும் பாரம்பரிய மூலப்பொருட்கள் கலந்த புனித நறுமண நீர் கோயில் வளாகம் முழுஅதும் தெளிக்கப்பட்டது. இதையடுத்து காலை 9.30 மணியில் இருந்து பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டனர். ஆழ்வார் திருமஞ்சன நிகழ்வில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
